முன் விரோதத்தில் தகராறு: இருவா் கைது

போடி அருகே முன் விரோதத்தில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
Updated on

போடி அருகே முன் விரோதத்தில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

போடி கீரைக் கடை சந்தை தெருவைச் சோ்ந்த சோலைராஜ் மகன் அஜித்குமாா் (27). போடி ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் வினோத்குமாா் (29). இவருக்கு நிச்சயம் செய்த பெண்ணை அஜித்குமாா் காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இதனால் இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், இருவரும் தகராறில் ஈடுபட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் இருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து அவா்கள் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com