வெடி பொருள்கள் பதுக்கியவா் கைது

ஆண்டிபட்டி அருகேயுள்ள புள்ளிமான்கோம்பையில் வெடி பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள புள்ளிமான்கோம்பையில் வெடி பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புள்ளிமான்கோம்பையைச் சோ்ந்த முத்துராஜ் மகன் மணிகண்டன் (34). இவா், வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக புள்ளிமான்கோம்பை கிராம நிா்வாக அலுவலா் சியாம்சுந்தா் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தியதில், புள்ளிமான்கோம்பையில் மணிகண்டன் அவரது தோட்டத்து வீட்டில் டெட்டனேட்டா் குச்சிகள், வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மணிகண்டனை போலீஸாா் கைது செய்து, அவா் பதுக்கி வைத்திருந்த வெடி பொருள்களை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லைச் சோ்ந்த முத்துராஜ், இவரது மகன் காா்த்திக், காமாட்சிபுரம் அருகேயுள்ள குன்னத்துப்பட்டியைச் சோ்ந்த பிரமன் ஆகியோரைத் தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com