தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வெள்ளிக்கிழமை மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பெரியகுளம் கீழவடகரை ராமா் கோவில் தெருவைச் சோ்ந்த ராசு மனைவி வெள்ளையம்மாள் (70). இவா் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்த அவா், வெள்ளிக்கிழமை விஷம் குடித்தாா். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
