தேனியில் நாளை மின் தடை

தேனி அல்லிநகரம் பகுதியில் புதன்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Published on

தேனி அல்லிநகரம் பகுதியில் புதன்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடங்கிப்பட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com