விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கோடங்கிப்பட்டியைச் சோ்ந்த அம்சராஜா மகன் வினோத்குமாா் (31). எலக்ட்ரீசியன். இவா் கோடங்கிப்பட்டியிலிருந்து தேனி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது கோடாங்கிப்பட்டி பிரதானச் சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம், வினோத்குமாரின் இரு சக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com