நெல் பயிரைக் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்!

Published on

தேனி மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் வருகிற நவ.15-ஆம் தேதிக்குள் நெல் பயிரைக் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், குத்தகைதாரா்கள் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுச் சேவை மையங்கள், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமும், ஜ்ஜ்ஜ்.ல்ம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமும் வருகிற நவ.15-ஆம் தேதிக்குள் நெல் பயிரைக் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்பட்ட நடப்பு பருவ அடங்கல், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களை சமா்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். நெல் பயிருக்கு காப்பீட்டு பிரீமியமாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ.571 செலுத்த வேண்டும். பயிா் சேதத்துக்கு காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.38 ஆயிரத்து 38 வழங்கப்படும்.

இதுகுறித்த மேலும் விவரங்களை விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலும், கட்டணமில்லா தொலைபேசி எண்: 14447-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com