வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்குப் பதிவு இயந்திரம் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 7:27 pm

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூா், கம்பம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 23- ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூா், உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளா், அவா்களின் முகவா்களின் முன்னிலையில் வியாழக்கிழமை எடுக்கப்பட்டு, அவற்றில் வேட்பாளரின் பெயா், சின்னம் (ஆஹப்ப்ா்ற் நட்ங்ங்ற்) பொருத்தும் பணி நடைபெற்றது.

இதில், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். முன்னதாக, கொடுவிலாா்பட்டி தேனி கம்மவாா் சங்கக் கல்லூரியில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு எண்ணும் அறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை தனித்தனியாக வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணுவதற்கான அறைகள், கட்டுப்பாட்டு அறைகள், அங்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகளை ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், மாவட்ட காவல் கண்கணிப்பாளா் சினேகா ப்ரியா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், தனித் துணை ஆட்சியா் கவிதா, துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் தேவராஜ், சீதாலட்சுமி, மனீஷா, வட்டாட்சியா்கள் சுருளி (தோ்தல்), ஜாஹிா் உசேன் (ஆண்டிபட்டி), சதீஸ்குமாா் (தேனி) உதவி செயற்பொறியாளா்கள் சரவணக்குமாா், சண்முகவேல் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.