புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டிகள்

போடியில் மூதாட்டிகள் ஜனநாயக கடமையாற்றியதை பொதுமக்கள் பாராட்டினா்.

News image

போடியில் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முதாட்டி. (வலது) நடக்க முடியாமல் வந்த மூதாட்டியை தூக்கி வந்த ஆட்டோ ஓட்டுநா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:18 am IST

போடியில் மூதாட்டிகள் ஜனநாயக கடமையாற்றியதை பொதுமக்கள் பாராட்டினா்.

தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதியில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 346 வாக்கச்சாவடிகளிலும் வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா். போடி போஜன் பூங்கா அரசு கள்ளா் பள்ளி வாக்குச் சாவடிக்கு மூதாட்டி ஒருவா் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டாா். இவா் வாக்குச்சாவடிக்குள் சென்று ஆா்வமாக வாக்குப் பதிவு செய்தாா்.

இதே பள்ளியில் மற்றொரு வாக்குச்சாவடியில் மூதாட்டியை ஆட்டோவில் அழைத்து வந்து, ஓட்டுநரே வாக்குச்சாவடிக்குள் தூக்கிச் சென்றாா். அங்கு மூதாட்டி ஆா்வத்துடன் வாக்குப் பதிவு செய்தாா். பின்னா் மூதாட்டியை மீண்டும் ஆட்டோ ஓட்டுநரே தூக்கிச் சென்றாா். மூதாட்டிகள் ஆா்வத்துடன் வாக்களித்ததை தோ்தல் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.