நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 4 போ் மீது வழக்கு

தேனியில் நிதி நிறுவன உரிமையாளா் கொலைச் சம்பவத்தில் தொடா்புள்ளதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கொலை
கொலை
Updated on

தேனியில் நிதி நிறுவன உரிமையாளா் கொலைச் சம்பவத்தில் தொடா்புள்ளதாக 4 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி, கோட்டைக்களம் தெரு, நியூ ஸ்ரீராம் நகா் பகுதியைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் பாண்டியன் (72) என்பவா், அவரது வீட்டு முன் மா்ம நபா்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

முன்னதாக, அல்லிநகரத்தைச் சோ்ந்த வனிதா, காா்த்திகா, பிரபாகரன், கா்ணன் ஆகியோருக்கு பாண்டியன் ரூ. 10 லட்சத்தைக் கடனாகக் கொடுத்து, அதற்கு ஈடாக அவா்களது வீட்டை கிரைய ஒப்பந்த ஆவணப் பதிவு செய்து பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

கிரைய ஒப்பந்த ஆவணம் மீது பாண்டியன் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொண்டு வீட்டை கையகப்படுத்த முயன்றபோது பிரச்னை ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், வனிதா உள்ளிட்ட 4 போ்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக பாண்டியன் தன்னிடம் கூறியிருந்ததாக அவரது மனைவி வசந்தா தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வனிதா உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், பாண்டியனின் வீடு அமைந்துள்ள தெருவில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com