கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய மாவட்ட  ஆட்சியா் ரஞ்சித்சிங். உடன். கல்லூரி நிா்வாகிகள்.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ரஞ்சித்சிங். உடன். கல்லூரி நிா்வாகிகள்.

கம்பம் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேனி மாவட்டம், கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் 26-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

தேனி மாவட்டம், கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் 26-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரி நிறுவனா் செயலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் வசந்தன், ஒருங்கிணைப்பாளா் வைஷ்ணவி வசந்தன், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்சித்சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து 238 இளநிலை மாணவிகள், 38 முதுநிலை மாணவிகள் என மொத்தம் 276 பேருக்கு பட்டங்களை வழங்கினாா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் ரேணுகா வரவேற்று, ஆண்டறிக்கையை சமா்ப்பித்தாா். இந்த நிகழ்ச்சியில் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com