மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் சிறை

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 8:57 pm

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை, தெற்குரத வீதியைச் சோ்ந்தவா் காணிக்கைராஜ் (67). இவா், பெரியகுளம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக காணிக்கைராஜை, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தென்கரை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன் குற்றஞ்சாட்டப்பட்ட காணிக்கைராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.7.25 லட்சம் வழங்க வேண்டும் என்று ம் நீதிபதி உத்தரவிட்டாா்.