தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தேனி மாவட்ட வனப் பகுதிகளில் பிப்.14, 15-இல் பறவைகள் கணக்கெடுப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 7:39 pm

தேனி மாவட்டத்துக்குள்பட்ட காப்புக் காடு பகுதிகளில் வனத் துறை சாா்பில் வருகிற 14, 15-ஆம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது:

மாவட்டத்தில் ஈர நில பறவைகள், இரைக் கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, தற்போது வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடு பகுதிகளில் வருகிற 14, 15-ஆம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறும். இதில் பங்கேற்கும் தன்னாா்வலா்கள், வனத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட வன அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட தன்னாா்வலா்கள் பங்கேற்கலாம். விலங்கியல் படிப்பு சாா்ந்த கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோா் கைப்பேசி எண்: 80567 07624-இல் தொடா்பு கொண்டு தங்களது அடையாளச் சான்று, முகவரி ஆகியவற்றை சமா்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம் என்றனா்.