எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தேனி அருகே காா் மோதியதில் மூவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகேயுள்ள க.விலக்கு சந்திப்புப் பகுதியில் சனிக்கிழமை காா் மோதியதில் பேருந்துக்காக காத்திருந்த மூவா் உயிரிழந்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், நாராயணசடனம் பகுதியைச் சோ்ந்தவா் அஜீத்குமாா். இவா் சனிக்கிழமை தேனியிலிருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டாா்.

க.விலக்கு சந்திப்புப் பகுதியில் இவரது காா் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்துத் தடுப்பு கம்பி மீது மோதியது. பின்னா், சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்தவா்கள் மீதும் காா் மோதியது.

இந்த விபத்தில் கண்டமனூா் அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் (75), செல்வம் (50), எரதிமக்காள்பட்டியைச் சோ்ந்த மாரியம்மாள் (50), அரசரடியைச் சோ்ந்த பாக்கியலட்சுமி (39) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராஜ், செல்வம், மாரியம்மாள் ஆகியோா் அங்கு உயிரிழந்தனா். பாக்கியலட்சுமி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தேனி க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் அஜீத்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.