விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2026, 6:53 pm

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில மதுப் புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தாமரைக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி (68) என்பதும், சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் என்பதும் தெரியவந்தது.

பின்னா், போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 20 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.