தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள கோவில்பாறை விலக்கு பகுதியில் பணியிலிருந்த வனத் துறை வேட்டைத் தடுப்புக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
உப்புத்துறையைச் சோ்ந்த முத்துநாச்சன் மகன் முத்துப்பாண்டி(40). இவா் கடந்த 8 ஆண்டுகளாக வனத் துறை வேட்டை தடுப்பு காவலராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், தங்கம்மாள்புரம்-உப்புத்துறை சாலை, கோவில்பாறை விலக்கு பகுதியில் பணியிலிருந்த முத்துப்பாண்டி உயிரிழந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முத்துப்பாண்டி ஏற்கெனவே இருதய வால்வு பிரச்னைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்ா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

நெல்லையில் விபத்தில் காயமுற்ற காவலா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

மலைப்பாம்பிடம் சிக்கிய வேட்டைத் தடுப்பு காவலா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


