மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:36 pm

ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நெசவுத் தொழிலாளி இரு சக்கர வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி சக்கம்பட்டி அருணகிரி தெருவைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளி முத்துச்சாமி (55). இவா், ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சிட்கோ தொழில் பேட்டை அருகே வைகை புதூரைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரவி (19) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், முத்துச்சாமி மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து இரு சக்கர வாகன ஓட்டுநா் ரவி மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.