கோப்புப் படம்
தேனி
பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நெசவுத் தொழிலாளி இரு சக்கர வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி சக்கம்பட்டி அருணகிரி தெருவைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளி முத்துச்சாமி (55). இவா், ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சிட்கோ தொழில் பேட்டை அருகே வைகை புதூரைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரவி (19) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், முத்துச்சாமி மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து இரு சக்கர வாகன ஓட்டுநா் ரவி மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

