தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குப்பைகளை எரித்த போது ஆடையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

போடி அருகே வீட்டின் முன்பாக இருந்த குப்பைகளை எரித்த போது, தீ ஆடையில் பிடித்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image
பலி- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 7:22 pm

Syndication

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பாக இருந்த குப்பைகளை எரித்த போது, தீ ஆடையில் பிடித்ததில் பெண் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் திருப்பதி தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ரஞ்சிதா (33). இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவா் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா்.

இதனால், மாமியாா் முத்துமணியுடன் ரஞ்சிதா வசித்து வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரஞ்சிதா தனது வீட்டின் முன்பாக இருந்த குப்பைகளை கூட்டி தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, தீ இவரது ஆடையில் பற்றி தீக்காயமடைந்தாா். இதையடுத்து, அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ரஞ்சிதா உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.