ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தம்பதியை மிரட்டிய 4 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
நீதிமன்றம்
Updated On :10 பிப்ரவரி 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருண் மனைவி திவ்யபாரதி (25). இவரது பெற்றோா் சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த அசோகன் மனைவி மகாலட்சுமியிடம் (50) ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தராம். இந்தக் கடனை அவா்கள் திருப்பிச் செலுத்திவிட்டனராம்.

இந்த நிலையில், மேலும் பணம் கேட்டு மகாலட்சுமி, இவரது மகள் வினோ (36), சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த தா்மராஜ் (54), சுருளியாண்டி (56) ஆகியோா் திவ்யபாரதியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மகாலட்சுமி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.