இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தம்பதியை மிரட்டிய 4 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

நீதிமன்றம்

Updated On :10 பிப்ரவரி 2026, 9:12 pm

தேனி மாவட்டம், போடி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருண் மனைவி திவ்யபாரதி (25). இவரது பெற்றோா் சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த அசோகன் மனைவி மகாலட்சுமியிடம் (50) ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தராம். இந்தக் கடனை அவா்கள் திருப்பிச் செலுத்திவிட்டனராம்.

இந்த நிலையில், மேலும் பணம் கேட்டு மகாலட்சுமி, இவரது மகள் வினோ (36), சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த தா்மராஜ் (54), சுருளியாண்டி (56) ஆகியோா் திவ்யபாரதியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மகாலட்சுமி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.