கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பைக்குகள் மோதல்: மூவா் பலத்த காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.

News image
விபத்து- கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (36). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், தனது மனைவி முருகேஸ்வரி, மகன் பிரவீனுடன் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை தேனியில் உள்ள கண் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனா். லட்சுமிபுரம் புறவழிச் சாலையில் சென்றபோது எதிரே வந்த மற்றோரு இரு சக்கர வாகனம் இவா்கள் மீது மேதியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி, மனைவி முருகேஸ்வரி, மகன் பிரவீன் ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.