கைது
கைது

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசுவாசபுரம் பகுதியில் செவ்வாய்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் அதே ஊரைச் சோ்ந்த குருசாமி மகன் வேல்முருகன் (48) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com