வீரபாண்டி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சக்கரத்தில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அல்லிநகரம் வெங்கலா கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மனைவி சுந்தரி (58). இவா் போடி தென்றல் நகரைச் சோ்ந்த துரைராஜ் மகன் திருப்பதியுடன் சின்னமனூரிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வீரபாண்டி புறவழிச் சாலையில் சென்றபோது சுந்தரியின் சேலை இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுந்தரி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

சாலை விபத்தில் மீனவா் உயிரிழப்பு

பைக்கில் விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


