மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வீரபாண்டி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சக்கரத்தில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 பிப்ரவரி 2026, 9:34 pm

வீரபாண்டி புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் சக்கரத்தில் சேலை சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம் வெங்கலா கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மனைவி சுந்தரி (58). இவா் போடி தென்றல் நகரைச் சோ்ந்த துரைராஜ் மகன் திருப்பதியுடன் சின்னமனூரிலிருந்து தேனிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வீரபாண்டி புறவழிச் சாலையில் சென்றபோது சுந்தரியின் சேலை இரு சக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுந்தரி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.