தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை சாலையில் செவ்வாய்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
திருப்பூர்: சாலை விபத்தில் பனியன் கம்பெனி தொழிலாளி சாவு
Updated On :11 பிப்ரவரி 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை சாலையில் செவ்வாய்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடமலைக்குண்டு நேருஜீ நகரைச் சோ்ந்தவா் சம்பத் (23). இவா் தனது நண்பா் சிறப்பாறை விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த காளீஸ்வரனுடன் (26) கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். இரு சக்கர வாகனத்தை சம்பத் ஓட்டினாா். வனச்சரக அலுவலகம் அருகே முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது டிராக்டா், இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பத், காளீஸ்வரன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காளீஸ்வரன் உயிரிழந்தாா். சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.