6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

26 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா் கைது

தேவதானபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :11 பிப்ரவரி 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி அல்அமீன் நகரில் உள்ள ரசூல்லாவின் (38) கடையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா். அவா் கடையிலிருந்த 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.