மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:53 pm

தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வீரபாண்டியில் திமுக, இதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வீரபாண்டி பிரதானச் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேனி மக்களவை தொகுதி உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதாக மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

இதில் திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக கூட்டணி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.