தேனி மாவட்டம், கூடலூா் அருகே காா் மீது வேன் மோதியதில் மருந்துக் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளியைச் சோ்ந்தவா் சுனில் (52). இவா், தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலையில் குடும்பத்துடன் தங்கி மருந்துக் கடை நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், கேரளத்துக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை அதிகாலையில் காரில் சிலமலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, லோயா் கேம்ப் பகுதியில் சபரிமலைக்குச் சென்ற வேன், காா் மீது மோதியதில் சுனில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வேனில் இருந்த செளந்தா் (37), செங்கோட்டையன்(49), ஓட்டுநா் வினோத்குமாா் (35) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வேன் மோதியதில் மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!

பைக் மீது கிரேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


