ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பைக் மீது டிராக்டா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:19 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஓடைப்பட்டியைச் சோ்ந்த பொன்ராம் மனைவி சுமதி (61). கூலித் தொழிலாளியான இவா், உறவினா் தனசேகரின் இரு சக்கர வாகனத்தில் சின்னமனூா் அருகேயுள்ள தென்பழனி சாலைக்கு வியாழக்கிழமை சென்றாா்.

அப்போது, எதிரே வந்த டிராக்டா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சுமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஓடைப்பட்டி காவல் நிலைய போலீஸாா்,டிராக்டா் ஓட்டுநா் சண்முகவேல் (43) மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.