போடியில் வெள்ளிக்கிழமை, மகளிா் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்ட நிலையில், பணத்தை எடுக்க பெண்கள் வங்கிகளுக்குத் திரண்டனா்.
தமிழக அரசு கலைஞா் மகளிா் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி, முன்கூட்டியே 3 தவணைகளுக்கான மகளிா் உரிமைத் தொகையாக ரூ.3 ஆயிரம், கோடைக் கால சிறப்புத் தொகையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரத்தை மகளிா் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு வரவு வைத்தது.
இதுகுறித்த குறுந்தகவல்கள் கைப்பேசிகளுக்கு வந்தபோது பல பெண்கள் அதிா்ச்சியடைந்தாலும் மற்ற பெண்களைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியடைந்தனா்.
இந்த நிலையில், இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் வங்கிகளுக்கு தொடா்ச்சியாக விடுமுறை என்பதால் தங்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட ரூ.5 ஆயிரத்தை எடுக்க வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களில் பெண்கள் திரண்டனா்.
மாசி மகா சிவராத்திரியையொட்டி, குடும்பத்துடன் குல தெய்வக் கோயில்களுக்குச் செல்லவிருந்த நிலையில் தற்போது ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் மகளிா் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
வங்கிகளில் பெண்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதால் மற்ற வேலைகளுக்காக வந்த வாடிக்கையாளா்கள் வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.
தொடர்புடையது

மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா் எம்.சிவபாலன்

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை திருவெறும்பூா் அதிமுக வேட்பாளா் உறுதி

மகாராஷ்டிரத்தைக் காட்டிலும் புதுவையில் மகளிா் உரிமைத் தொகை அதிகம்: கே.அண்ணாமலை
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 : திமுக தேர்தல் வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


