அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கண்டனம்

News image

கம்பத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி எம்.பி. சிவா. உடன் கட்சி நிா்வாகிகள்.

Updated On :13 பிப்ரவரி 2026, 8:25 pm

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவையில் உரிய தகவல்களைத் தெரிவிக்காத மத்திய வா்த்தகத் துறை அமைச்சரின் செயல், உரிமை மீறல் என திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் சிவா கண்டனம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், கம்பத்தில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் செல்வேந்திரன், கம்பம் நகரச் செயலா்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா, சின்னமனூா் கிழக்கு ஒன்றியச் செயலா் அண்ணாத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் சிவா பேசியதாவது:

இந்தியாவின் ஒட்டுமொத்த வருமானத்தில், தமிழ்நாடு செலுத்தும் வரியில் ரூ.9.04-ஐ மட்டுமே மத்திய அரசு திருப்பித் தருகிறது. ஆனால், பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதலாகக் கொடுக்கிறது.

புதியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கான நிதி ரூ.3,400 கோடியை விடுவிக்க மத்திய அரசு மறுக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் மக்களவையில் உரிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இந்தச் செயல் உரிமை மீறல் ஆகும்.

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், பொங்கல் பரிசு, காலை உணவுத் திட்டம் என பல திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் திமுகவுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.