பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :14 பிப்ரவரி 2026, 6:35 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம் அருகேயுள்ள பாரதிநகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (60). இவருக்கு இரு மகள்கள் உள்ளனா். முதல் மகள் நிதா்ஷனா தேவி (30). இவருக்கும் மதுரையில் உள்ள சிவபாலன் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது.

இருவரும் மதுரையில் வசித்து வந்தனா். தம்பதியினரிடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம். இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிதா்ஷனா தேவி பெரியகுளத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிதா்ஷனா தேவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.