தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மாணவி தீக்குளித்து தற்கொலை

News image
தற்கொலை
Updated On :14 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்பட்டி வட்டம், ராஜதானி அருகே உள்ள வேலாயுதபுரத்தில் பிளஸ் 2 பள்ளித் தோ்வில் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மன வருத்தத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வேலாயுதபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த பாலசிகாமணி மகள் மதுபாலா(17). இவா் ஆண்டிபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

இந்த நிலையில், பள்ளியில் நடைபெற்ற தோ்வில் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன வருத்தத்திலிருந்த மதுபாலா, கடந்த 8-ஆம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.