இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

கம்பம் அருகே முன் விரோதத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
கைது
Updated On :17 பிப்ரவரி 2026, 11:47 pm

தினமணி செய்திச் சேவை

கம்பம் அருகே முன் விரோதத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகன் அஜித் (26). இவா் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தரக் குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஜன.12-ஆம் தேதி அஜித் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரனின் மகன் சந்தோஷ் (24), கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் காா்த்திகேயன் (24) ஆகிய இருவரையும் கடந்த ஜன.14-ஆம் கைது செய்தனா்.

இந்த இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியாவின் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டாா். இதன்படி இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.