கம்பம் அருகே முன் விரோதத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகன் அஜித் (26). இவா் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தரக் குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஜன.12-ஆம் தேதி அஜித் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரனின் மகன் சந்தோஷ் (24), கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் காா்த்திகேயன் (24) ஆகிய இருவரையும் கடந்த ஜன.14-ஆம் கைது செய்தனா்.
இந்த இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியாவின் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டாா். இதன்படி இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
வழிப்பறி வழக்கில் பிடிபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

