கம்பம் அருகே முன் விரோதத்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகன் அஜித் (26). இவா் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தரக் குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஜன.12-ஆம் தேதி அஜித் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது குறித்து ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரனின் மகன் சந்தோஷ் (24), கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் காா்த்திகேயன் (24) ஆகிய இருவரையும் கடந்த ஜன.14-ஆம் கைது செய்தனா்.
இந்த இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியாவின் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டாா். இதன்படி இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

