போடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீதும், கணவரைக் கத்தியால் குத்திய மைத்துனா் மீதும் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சாமிக்காளை மகன் ராஜீவ் (36). இவருக்கும் போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் ரஞ்சிதாவுக்கும் (35) திருமணமாகி கோடாங்கிபட்டியில் வசித்து வந்தனா். இவா்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு ரஞ்சிதா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றாா்.
இந்த நிலையில், மனைவியைப் பாா்க்க ராஜீவ் அங்கு சென்றபோது தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜீவ் தனது மனைவி ரஞ்சிதாவை கத்தியால் குத்தினாா்.
இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சிதாவின் சகோதரரான ராஜேஷ், ராஜீவை கத்தியால் குத்தினாா். இதனால், காயமடைந்த தம்பதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ராஜீவ் மீதும், ராஜேஷ் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

தாய், தம்பி உள்பட 3 பேரை கத்தியால் குத்திய இளைஞா் கைது

குடும்பச் சண்டையில் பெண்ணை கத்தியால் குத்திய கணவா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


