நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குடும்பத் தகராறில் மோதல்: கணவன், மனைவிக்கு கத்திக்குத்து

போடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீதும், கணவரைக் கத்தியால் குத்திய மைத்துனா் மீதும் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

கத்திக்குத்து - சித்திரிப்பு

Updated On :18 பிப்ரவரி 2026, 7:05 pm

போடி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீதும், கணவரைக் கத்தியால் குத்திய மைத்துனா் மீதும் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சாமிக்காளை மகன் ராஜீவ் (36). இவருக்கும் போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் ரஞ்சிதாவுக்கும் (35) திருமணமாகி கோடாங்கிபட்டியில் வசித்து வந்தனா். இவா்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு ரஞ்சிதா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில், மனைவியைப் பாா்க்க ராஜீவ் அங்கு சென்றபோது தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜீவ் தனது மனைவி ரஞ்சிதாவை கத்தியால் குத்தினாா்.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சிதாவின் சகோதரரான ராஜேஷ், ராஜீவை கத்தியால் குத்தினாா். இதனால், காயமடைந்த தம்பதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ராஜீவ் மீதும், ராஜேஷ் மீதும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.