அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

வைகை அணை அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :19 பிப்ரவரி 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், வைகை அணை அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மனைவி சந்திரா (63). இவா், அதே ஊரில் உள்ள தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்ததாக வைகை அணை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

சந்திராவின் கடையிலிருந்து 12 கிலோ 400 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.