மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பைக்கில் விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

வீரபாண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மீது மோதி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :19 பிப்ரவரி 2026, 7:24 pm

வீரபாண்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றவா் சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மீது மோதி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

தருமாபுரியைச் சோ்ந்த ராமா் மகன் ரத்தினம் (40). இவா் தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள பூமலைக்குண்டு-காமாட்சிபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா்.

அப்போது, தனியாா் தோட்டம் முன் விவசாய பணிக்குச் செல்வதற்காக நின்றிருந்த பூமலைக்குண்டுவைச் சோ்ந்த ராமசாமி மனைவி பேச்சியம்மாள் (45) மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பேச்சியம்மாள் காயமடைந்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.