வீரபாண்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றவா் சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மீது மோதி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
தருமாபுரியைச் சோ்ந்த ராமா் மகன் ரத்தினம் (40). இவா் தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள பூமலைக்குண்டு-காமாட்சிபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா்.
அப்போது, தனியாா் தோட்டம் முன் விவசாய பணிக்குச் செல்வதற்காக நின்றிருந்த பூமலைக்குண்டுவைச் சோ்ந்த ராமசாமி மனைவி பேச்சியம்மாள் (45) மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பேச்சியம்மாள் காயமடைந்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஆட்டோக்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


