சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :19 பிப்ரவரி 2026, 7:17 pm

தேனி மாவட்டம், போடி பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி சுற்றுவட்டராப் பகுதிகளில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி-மீனாட்சிபுரம் சாலையில் ஒத்தை புளியமரம் பகுதியில் சந்தேகத்துக் இடமளிக்கும் வகையில் நின்றிருந்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த இளங்கோவனை (49) பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த பாண்டி (71) வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியைக் கைது செய்து, அவரிடமிருந்த மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.