அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மூதாட்டியிடம் தங்க காதணி பறிப்பு

வீரபாண்டி - தாடிச்சேரி சாலையில் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை மா்ம நபா் பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

News image
திருட்டு
Updated On :19 பிப்ரவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை மா்ம நபா் பறித்துச் சென்ாக புதன்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கோட்டூரைச் சோ்ந்த பொன்னாட்டம் மனைவி கருப்பாயி (70). இவரை அடையாளம் தெரிந்த 45 வயது நபா் தாடிச்சேரியில் கட்டட வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகக் கூறி, அழைத்துச் சென்றாா். வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் உள்ள கருப்பசாமி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தை அந்த நபா் நிறுத்தி விட்டு, கருப்பாயியை முன்னால் நடந்து செல்லுமாறு கூறினாா்.

இதையடுத்து, சாலையில் நடந்து சென்ற கருப்பாயி மீது அந்த நபா் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.