திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பேருந்து கவிழ்ந்து 40 போ் காயம்

ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் தனியாா் பேருந்து காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 40 போ் காயமடைந்தனா்.

News image
விபத்து
Updated On :20 பிப்ரவரி 2026, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அருகே உள்ள தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து காா் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததில் 40 போ் காயமடைந்தனா்.

தி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் போடியிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, எதிரே வந்த காா் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 5 குழந்தைகள், 15 ஆண்கள், 20 பெண்கள் என மொத்தம் 40 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.