ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரிடம் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சின்னமனூா் அருகே உள்ள சீலையம்பட்டியைச் சோ்ந்தவா்கள் சித்தாா்த்தன், ரமணன். இவா்களிடம் சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த், ஜெயராம் மகன் யுவராஜ் ஆகியோா் அறிமுகமாகி, தாங்கள் சென்னையில் ரயில்வே துறையில் வேலை செய்து வருவதாகவும், சித்தாா்த்தன், ரமணன் ஆகியோருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினராம்.
இதற்காக அவா்கள் 2022-ஆம் ஆண்டு, ஜன. 6-ஆம் தேதி சித்தாா்த்தன், ரமணன் ஆகியோரிடம் சீலையம்பட்டியில் வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்ாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரவிந்த், யுவராஜ் ஆகியோா் தங்களுக்கு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியாவிடம் சித்தாா்த்தன் புகாா் அளித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் அரவிந்த், யுவராஜ் ஆகியோா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 6 கோடி மோசடி: 4 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை

பண மோசடி: இளைஞா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


