தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரிடம் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

பண மோசடி

Updated On :20 பிப்ரவரி 2026, 9:43 pm

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரிடம் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக சென்னையைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சின்னமனூா் அருகே உள்ள சீலையம்பட்டியைச் சோ்ந்தவா்கள் சித்தாா்த்தன், ரமணன். இவா்களிடம் சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த், ஜெயராம் மகன் யுவராஜ் ஆகியோா் அறிமுகமாகி, தாங்கள் சென்னையில் ரயில்வே துறையில் வேலை செய்து வருவதாகவும், சித்தாா்த்தன், ரமணன் ஆகியோருக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினராம்.

இதற்காக அவா்கள் 2022-ஆம் ஆண்டு, ஜன. 6-ஆம் தேதி சித்தாா்த்தன், ரமணன் ஆகியோரிடம் சீலையம்பட்டியில் வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் பெற்ாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரவிந்த், யுவராஜ் ஆகியோா் தங்களுக்கு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியாவிடம் சித்தாா்த்தன் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் அடிப்படையில் அரவிந்த், யுவராஜ் ஆகியோா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.