எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :21 பிப்ரவரி 2026, 6:36 pm

போடி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி அருகேயுள்ள குரங்கணி நரிப்பட்டி மலை கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் நந்தகுமாா் (23). இவா், டிரம் செட் வாசிக்கும் இசைக் கலைஞராகப் பணியாற்றி வந்தாா். சில நாள்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றாா். அப்போது, இவரது அண்ணனான சூா்யாவின் சட்டையை அணிந்து சென்றாராம்.

இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய நந்தகுமாரை அவரது அண்ணன் சூா்யா, தன்னுடைய சட்டையை அணிந்துசென்ற்காகக் கண்டித்தாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சூா்யாவை நந்தகுமாா் தாக்கிவிட்டு வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை வெளியே சென்றாா்.

அதன் பிறகு, நந்தகுமாா் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் நந்தகுமாரைத் தேடிச் சென்றபோது, அவா் தனியாா் தோட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குரங்கணி காவல் நிலைய போலிஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.