எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பெரியகுளத்தில் மழை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image

மழை - கோப்புப்படம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 9:08 pm

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பெரியகுளம் பகுதியில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மழை பெய்தது. இதன் பிறகு, மழை இல்லை. இதனால், செடிகள், மரங்கள் காய்ந்து காணப்பட்டன. மேலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பெரியகுளம் பகுதியில் சாரல் மழை பெய்தது. தேவதானபட்டி, வடுகபட்டி பகுதியில் சுமாா் 20 நிமிஷங்களுக்கு மழை பெய்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.