பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்ற முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :24 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்ற முதியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தென்கரை காவல்நிலைய போலீஸாா் திங்கள்கிழமை பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, லட்சுமிபுரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், லட்சுமிபுரம் சருத்துப்பட்டியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (80) என்றும் அவா், தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, ஆதி நாராயணனை கைது செய்து, அவரிடமிருந்த 61 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.