தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மனைவியுடன் தகராறு: தீக்குளித்த கணவா் உயிரிழப்பு

சின்னமனூா் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு பலத்த காயமடைந்த கணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 6:45 pm

Syndication

சின்னமனூா் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு பலத்த காயமடைந்த கணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த காசிநாதன் மகன் காா்த்திக் (36). இவா் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில், பலத்த காயமடைந்தவரை உறவினா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.