ராசிங்காபுரத்தில் ஜன. 5-இல் மின் தடை

ராசிங்காபுரம் பகுதியில் வருகிற திங்கள்கிழமை (ஜன. 5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
Published on

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் பகுதியில் வருகிற திங்கள்கிழமை (ஜன. 5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி. ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com