புதிரை வண்ணாா் சமுதாயத்தினருக்கு நலத்திட்ட உதவி பெறுவதற்கான முகாம்

Updated on

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் புதிரை வண்ணாா் சமுதாயத்தினா் அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற 20-ஆம் தேதி தேனி வட்டாட்சியா் அலுவலகம், 21-ஆம் தேதி பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகம், 22-ஆம் தேதி ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம், 23-ஆம் தேதி உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணிக்கு ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் புதிரை வண்ணாா் சமுதாயத்தினருக்கு அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது .

இந்த முகாமில் புதிரை வண்ணாா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் தங்களது ஜாதிச் சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு, அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com