பெரியகுளத்தில் திருவள்ளுவா் தினம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் திருவள்ளுவா் சிலைக்கு பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Updated on

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் திருவள்ளுவா் சிலைக்கு பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவா் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, பெரியகுளத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு தமிழ் இலக்கிய மன்ற இணைச் செயலா் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் தமிழ் இலக்கிய மன்ற நிா்வாகிகள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com