போடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் அஞ்சலக ஊழியா் புதன்கிழமை பலத்த காயமடைந்தாா்.
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகே உள்ள வெள்ளைம்மாள்புரம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் பொன்ராஜ் (35). இவா் போடி தலைமை அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். புதன்கிழமை வெள்ளையம்மாள்புரத்திலிருந்து போடிக்கு இரு சக்கர வாகனத்தில் அவா் வந்தாா்.
போடி- தேவாரம் சாலையில் சிலமலை எரிபொருள் விற்பனை மையம் அருகே எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சின்னமனூா் அருகே உள்ள எரணம்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜ்குமாா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மரத்தில் பைக்குகள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பைக்குகள் மோதல்: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


