கோப்புப் படம்
தேனி
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தென்கரை போலீஸாா் லட்சுமிபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சிவக்குமாா் (50) என்பவரது பெட்டிக்கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அவா் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ 677 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

