கைது
கைது

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

தேவதானபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தேவதானபட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி புறவழிச் சாலையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் (47), ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (60) ஆகியோா் என்பதும் இருவரும் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 32 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com