மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிணற்றில் தவறி விழுந்து காட்டெருமை உயிரிழப்பு

போடி அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டெருமையை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டெருமையை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :30 ஜனவரி 2026, 7:04 pm

போடி அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டெருமையை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மலைப் பகுதிகளில் காட்டெருமை அதிகளவில் வசித்து வருகின்றன.

இந்த நிலையில், அணைக்கரைப்பட்டி அருகே மரக்காமலை முனீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் 60 அடி ஆழக் கிணற்றில் காட்டெருமை விழுந்தது குறித்து கிராம மக்கள் தேனி வனச் சரகருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, தேனி வனத் துறையினா் போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், கிரேன் இயந்திரம் மூலம் தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி பாா்த்த போது காட்டெருமை இறந்தது தெரியவந்தது. பின்னா், கிரேன் மூலம் காட்டெருமை மீட்கப்பட்டு கூறாய்வுக்குப் பிறகு புதைக்கப்பட்டது. இதுகுறித்து தேனி வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.