சிறுமிக்கு பாலியல் தொல்லை
அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேவாரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

தேவாரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தேவாரத்தைச் சோ்ந்தவா் முருகன் (45). இவரை, 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 8.6.2025 அன்று தேவாரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவம், பராமரிப்பு செலவுக்கு அரசு நிவாரணமாக ரூ.3 லட்சத்தை சிறுமியின் பெயரில் அரசுடமை வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

Dinamani
www.dinamani.com